1369786

பாக்தாத்: இ​ராக்​கில் வணிக வளாகத்​தில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 61 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து குறித்து விசா​ரணை நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

கிழக்கு இராக்​கின் வசிட் மாகாணம் குட் நகரில் ஒரு வாரத்​துக்கு முன்பு ஒரு புதிய வணிக வளாகம் திறக்​கப்​பட்​டது. 5 தளங்​களைக் கொண்ட அதில் உணவகம், சூப்​பர் மார்க்​கெட் உள்​ளிட்​டவை இயங்கி வரு​கின்​றன. இந்​நிலை​யில், புதன்​கிழமை இரவு அந்த வணிக வளாகத்​தில் தீ விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்​புப் படை​யினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று தீயை அணைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். மீட்​புப் படை​யினரும் பாதிக்​கப்​பட்​ட​வர்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest