
லண்டன்: தனது தலையீடு இல்லையென்றால் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் தொடர்ந்திருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
தற்போது பிரிட்டன் சென்றுள்ள டொனல்டு ட்ரம்ப், அந்த நாட்டின் பிரதமர் ஸ்டார்மரை ஸ்காட்லாந்தில் உள்ள டர்ன்பெர்ரியில் சந்தித்தார். அந்த சந்திப்புக்கு முன்னதாக உலக நாடுகளுக்கு இடையிலான போர் குறித்து ட்ரம்ப் பேசினார்.