aE0HYzcTU4s_2052290

திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணியை தொடரச் செய்ய மல்லிகார்ஜூன கார்கே, ப. சிதம்பரம் முக்கிய பங்காற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிஷ் சோடங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டாத நிலையில், திமுகவுடன் தொடக்கம் முதலே சுமூக போக்கை கடைபிடித்து வரும் ப.சிதம்பரத்தை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினால் கூடுதல் தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் நடத்திய ஆலோசனையில் பெரும்பாலானோர் திமுக கூட்டணியை தொடர விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, “கூட்டணியை இறுதி செய்ய காங்கிரஸாருக்கு இறுதி கெடு” என மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்தெரிவித்துள்ளார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest