
பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று (ஜூலை 15) நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று சீனா சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்துப் பேசினார்.