சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவைகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் அலுவலகம் செல்வோரும், மாணவர்களும் ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், விரைவில் போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Read more