E0AEAAE0AEBEE0AEB2E0AEBE-E0AE95E0AF8BE0AEB2E0AF8DE0AE95E0AEBFE0AEB2

மலையாள நடிகர் பாலா தனது மனைவியான கோகிலா காருண்யா லட்டரியில் 25,000 ரூபாய் வென்றதை சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு கொண்டாடியுள்ளார்.

அவருடைய லாட்டரி டிக்கெட் எண் 4935 என்பதைக் காண்பித்து, வீடியோ பதிவிட்டுள்ளார். “முதன்முறையாக, என் அதிர்ஷ்டம் நமது அதிர்ஷ்டம், ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்” எனக் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.

இதுதான் கோகிலா முதன்முறையாக லாட்டரியை வெல்வது எனக் கூறியுள்ளார்.

பாலா - கோகிலா
பாலா – கோகிலா

வீடியோவில் பாலா பரிசுத் தொகையை கோகிலாவிடம் ஒப்படைப்பதைக் காண முடிகிறது. அவரிடம், “இதை வைத்து யாராவது ஒருவருக்கு நல்லது செய்” எனக் கூறுகிறார்.

கமண்டில் பலரும் அந்த தம்பதியின் தாராள மனதைப் பாராட்டியுள்ளனர்.

சிறுத்தை சிவா சகோதரரான பாலா மலையாளத்தில் புலிமுருகன், லூசிஃபர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடக்க காலத்தில் கலிங்கா, சவுண்ட் ஆஃப் பூட் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் அஜித் குமார் நடித்த வீரம் திரைப்படத்தில் அவரின் தம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார்.

பாலா – கோகிலா தம்பதி

இரண்டு திருமணங்கள் தோல்வி அடைந்த நிலையில், கடந்த 2024 அக்டோபரில் மூன்றாவதாக கோகிலாவை மணந்தார் பாலா. 2010ம் ஆண்டு அவர் பாடகி அம்ருதா சுரேஷை மணந்தார், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 2019ம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.

2021ம் ஆண்டு எலிசபெத் உதயன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சட்டப்பூர்வமாக இவர்கள் திருமணம் நடைபெறவில்லை. 2023ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

கோகிலா அவரது உறவினர் மற்றும் தமிழ் பின்னணியைக் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

புதிய தம்பதியான இருவரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வெளிப்படையாக, இயல்பாக பேசுவதனால் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார் கோகிலா. குறிப்பாக அவர் பாலாவை மாமா என அழைப்பதை அவர்களது ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest