
வாஷிங்டன்: பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 8 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரபூர்வ கடிதங்கள் எழுதியுள்ளார். இந்த நாடுகள் மீதான அனைத்து புதிய வரிகளும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி பிரேசில் நாட்டுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அல்ஜீரியா, ஈராக், லிபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு 30% வரியும்; புருனே மற்றும் மால்டோவா நாடுகள் மீது 25% வரியும்; பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 20% வரியும் விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.