1368695

பிரேசிலியா: பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதி​களில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற்​றது. இந்த மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார்.

ரியோ டி ஜெனிரோ​வில் இருந்து அவர் நேற்று முன்​தினம் இரவு பிரேசில் தலைநகர் பிரேசிலி​யா​வுக்கு சென்​றார். அங்கு விமான நிலை​யத்​தில் பிரேசில் பெண் கலைஞர்​கள் ட்ரம்ஸ் இசைத்து பிரதமர் மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். மேலும் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தி வரவேற்​றனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest