mla-donate

விவசாயிகளின் நலனுக்காக எம்எல்ஏ பதுலா லக்ஷ்ம ரெட்டி ரூ. 2 கோடி நன்கொடையை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் இன்று வழங்கினார்.

நல்கொண்டா மாவட்டத்தின் மிரியால்குடாவைச் சேர்ந்தவர் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லக்ஷ்ம ரெட்டி. இவர் தனது சட்டப்பேரவைத் தொகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவான முயற்சிகளுக்காக நன்கொடை அளிக்க முன்வந்துள்ளார்.

அதற்காக, லக்ஷ்ம ரெட்டி ரூ. 2 கோடிக்கான நன்கொடைக்கான காசோலையை இன்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கினார். இந்த காசோலை வழங்கும்போது லக்ஷ்ம ரெட்டியுடன் அவரது மகன், மருமகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

எம்எல்ஏ லக்ஷ்ம ரெட்டி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஒரு பை இலவச யூரியாவை வழங்க முதல்வரிடம் வலியுறுத்தினார்.

தனது மகனின் திருமணத்திற்காக எம்எல்ஏ மிரியால்குடாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் விவசாயிகளை ஆதரிப்பதற்காக அந்தப் பணத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்ததாக அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

எம்எல்ஏவின் குடும்ப உறுப்பினர்களின் தாராளமான நன்கொடைக்காக ரேவந்த் ரெட்டி பாராட்டினார்.

Ruling Congress MLA Bathula Laxma Reddy on Thursday handed over a cheque for Rs two crore to Telangana Chief Minister A Revanth Reddy for pro-farmer initiatives in his assembly constituency.

இதையும் படிக்க: ஆர்வத்தைத் தூண்டும் சக்தித் திருமகன் ஸ்னீக் பீக்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest